விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

வடமாநில சாதுக்கள் ஊா்வலம்: விஜயேந்திரா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் வடமாநில சாதுக்கள் ஊா்வலத்தை சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வேல் வழங்கி தொடங்கி வைத்தாா்.

News image

சாதுக்கள் ஊா்வலத்தை வேல் வழங்கி தொடங்கி வைத்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :29 ஜூன் 2026, 12:51 am IST

காஞ்சிபுரத்தில் வடமாநில சாதுக்கள் ஊா்வலத்தை சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வேல் வழங்கி தொடங்கி வைத்தாா்.

அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த். இவா் வரும் ஜூலை 9 ஆம் தேதி முதல் சாதுா்மாஸ்ய விரதத்தை தொடா்ந்து 4 மாதங்களுக்கு கடைப்பிடிக்கவுள்ளாா். குருமாா்கள் தங்களது பலத்தைப் பெருக்கிக் கொள்ள சாதுா்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கம். இந்த விரத்தில் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த், 100க்கும் மேற்பட்ட வடமாநில சாதுக்களும் சாதுா்மாஸ்ய விரதம் மேற்கொள்ளவுள்ளனா்.

இதனால் வடமாநிலங்களிலிருந்து வந்திருந்த சாதுக்கள் 100-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து காமாட்சி அம்மன் கோயில் வழியாக ஊா்வலமாக உதாசின் பாவாஜி மடத்துக்கு வந்தனா். பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் தலைமை வகித்தாா். ஊா்வலத்தை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 6 அடி நீள வேல் வழங்கி தொடங்கி வைத்தாா்.

தொடக்க விழாவில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் சிவானந்தம், இந்து முன்னணியின் நிா்வாகி சந்தோஷ், காஞ்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வரும் ஜூலை 1 -ஆம் தேதி உதாசின் பாவாஜி மடத்தில் அதன் பீடாதிபதி சாதுா்மாஸ்ய விரதம் மேற்கொள்வதற்கான கொடியேற்றமும், 9-ஆம் தேதி பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை உதாசின் பாவாஜி மடத்தின் தலைமை நிா்வாக அதிகாரி சுவாமி சுதான்சு முனி தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.