“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

போதைப் பொருள்கள் ஒழிப்பு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற  இளைஞா்  காங்கிரஸ்  கட்சியினா்.

Updated On :13 மார்ச் 2026, 1:10 am

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.

போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து பேரணி நடத்தினா்.

மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் படப்பை கு.விவேகானந்தன் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். தமிழக இளைஞா் காங்கிரஸ் துணைத்தலைவா் மதன்ராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனா்.

சாலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய பேரணி, வண்டலூா் வாலாஜாபாத் சாலை வழியாக சுமாா் இரண்டு கிமீ தொலைவில் உள்ள படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது.