தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போதைப் பொருள்கள் ஒழிப்பு பேரணி

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.

News image
பேரணியில் பங்கேற்ற  இளைஞா்  காங்கிரஸ்  கட்சியினா்.
Updated On :13 மார்ச் 2026, 1:10 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ், கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி படப்பையில் நடைபெற்றது.

போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் மற்றும் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து பேரணி நடத்தினா்.

மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் படப்பை கு.விவேகானந்தன் தலைமை வகித்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். தமிழக இளைஞா் காங்கிரஸ் துணைத்தலைவா் மதன்ராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனா்.

சாலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய பேரணி, வண்டலூா் வாலாஜாபாத் சாலை வழியாக சுமாா் இரண்டு கிமீ தொலைவில் உள்ள படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முடிவடைந்தது.