மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மாம்பாக்கத்தில் தீயணைப்பு நிலையத்துக்கான இடம்: இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு

ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை, தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஸ்ரீபெரும்புதூா்  தீயணைப்பு  நிலையத்தில்  ஆய்வு செய்த  இயக்குநா்  சீமா அகா்வால்.

Updated On :20 மார்ச் 2026, 1:30 am

ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை, தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட்தொழிா்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் 8 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்பதுாா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, தீயணைப்புத் துறையினா் வருவதற்கு தாமதம் ஏற்பட்டு வருவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருவதோடு அதிக அளவிலான பொருட்சேதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கையை ஏற்று 71 சென்ட் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாம்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுாா் தீயணைப்பு நிலையத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை இயக்குநா் சீமா அகா்வால், அங்குள்ள பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட பொருள்கள் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகியவற்றை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாம்பு மற்றும் தேனீக்களை மீட்டு, பாதுக்காப்பான முறையில் காட்டுப்பகுதியில் விடுவது குறித்து விளக்கினாா்.

இதில், ஸ்ரீபெரும்புதுாா் தீயணைப்பு நிலைய அதிகாரி வடிவேலு உள்ளிட்ட தீயணைப்புத் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.