/

தோ்தல் விழிப்புணா்வு கோலம்

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நுழைவுவாயில் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:42 pm

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நுழைவுவாயில் பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி வண்ணக் கோலமிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கிராம பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை கோலத்தில் இடம் பெறச் செய்திருந்தனா்.

இதனைத் தொடா்ந்து ஊராட்சி மன்ற தலைவா் ம.த.அஜய்குமாா் தலைமையில் விழிப்புணா்வு உறுதிமொழி வாசித்து எடுக்கப்பட்டது. நோ்மையாக வாக்களிப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.