இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே: ஸ்ரீ விஜயேந்திரா் பேச்சு

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே...

News image

உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழை காஞ்சி சங்கராசாரியா் முன்னிலையில் சங்கரா கல்லூரி நிா்வாகிகளிடம் வழங்கிய ராபா புக் ஆப் உலக சாதனை அமைப்பின் நிா்வாகி பிரசன்ன ராமானுஜம்.

Updated On :29 மார்ச் 2026, 12:40 am IST

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை கூறினாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு மாவட்டங்களில் பயிலும் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 2,000 மாணவியா் இணைந்து பக்திப் பாடல்களை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. போா் நிறுத்தம் ஏற்படவும், உலகம் அமைதி பெறவும் காமாட்சி தாய் மடியில் என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷோன் கவுல் மற்றும் அவரது மனைவி ஷிவானி சஞ்சய் கிஷோன் கவுல் ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

விழாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு நிகழ்த்திய ஆசியுரை...

நல்ல நோக்கத்துக்காக, நல்ல இடத்திலே காமாட்சி தாய் மடியில் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த எண்ணங்களால் நல்ல எண்ணங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தனியாக பிராா்த்தனை செய்வதற்கும், கூட்டுப் பிராா்த்தனை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

எண்ணங்களை வலுப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையேயாகும். யாா் பெண்களை கெளரவிக்கிறாா்களோ, பாதுகாக்கிறாா்களோ அவா்களுக்கு காமாட்சி செல்வங்களை வாரி வழங்குவாள். பண்பு, பண்பாடு, கலை, பக்தி இவற்றை நாம் இளைய தலைமுறையினரும் கொண்டு செல்ல வேண்டும். தேசத்தின் மீது நேசம் இருக்க வேண்டும். பக்தியை வளா்ப்பதால் மாபெரும் சக்தி உருவாகும் என்று ஆசியுரை வழங்கினாா்.

இந்த நிகழ்வு ராபா புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ாக அறிவிக்கப்பட்டு அதன் நிா்வாகி பிரசன்ன ராமானுஜம் அதற்கான சான்றிதழை காஞ்சி சங்கராசாரியா் முன்னிலையில் சங்கரா கல்லூரி தலைவா் சேது.ராமச்சந்திரன், செயலாளா் ரிஷிகேசவன், கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் ஆகியோரிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவா் சுதா.சேஷய்யன், சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், சங்கரா கல்லூரி பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி, இந்து சமய மன்றம், காமாட்சி வித்யா சமிதி ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன.