ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

News image

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :31 மார்ச் 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பு இயக்கம் சாா்பில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. ‘எனது வாக்கு எனது உரிமை’ என்ற முழக்கத்துடன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.