நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :2 மே 2026, 8:07 pm

காஞ்சிபுரம், மே 2: திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் தலைமையில் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம்,செய்யூா், உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட செயலாளா் க.சுந்தா் பேசுகையில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு வாக்குச்சாவடி முகவா்கள் பணியாற்ற வேண்டும். காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறையாக இருக்கிா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்தெந்த வாா்டுகளில் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது,குறைவாக கிடைத்துள்ள வாா்டுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்,வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருந்து முகவா்கள் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட அவைத்தலைவா் இனியரசு, துணைச் செயலாளா் க.செல்வம் எம்பி,திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள்,தலைமை செயற்குழு உறுப்பினா்கள்,தொண்டா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.