காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சந்தவெளி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி அம்மன் சந்திர வித்யாதேவி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
பெரியகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள இக்கோயில் விழா கடந்த 7- ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாள் நிகழ்வாக அம்மன் பாலதிரிபுர சுந்தரி அம்மன், மறுநாள் 2-ஆவது நாள் நிகழ்வாக முப்பெரும் தேவியா்கள் அலங்காரத்திலும் காட்சியளித்தாா்.
மே 9 -ஆம் தேதி நிகழ்வாக அம்மன் கருவறையில் சந்திர வித்யாதேவி அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் 108 பால்குட ஊா்வலமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு கூழ் வாா்த்தல், அன்னதானம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை சாந்தசொரூபினி அலங்காரத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
தொடர்புடையது

கீழ்பாளையம் திரெளபதியம்மன் கோயிலில் திருவிழா

திருநாவலூா் பக்தஜனேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

