பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 30 பேருக்கு தங்கப் பதக்கம்

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற காஞ்சிபுரம் வீரா்கள்.

News image

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற காஞ்சிபுரம் வீரா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வீரா்கள் 30 போ் தங்கம் வென்று தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டிக்கு தோ்வாகி உள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கமான பேரறிஞா் அண்ணா உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான குத்துச் சண்டைப் போட்டி தமிழ்நாடு அமெச்சூா் குத்துச்சண்டைக் கழகம் சாா்பில், மே 7-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான குத்துச்சண்டை வீரா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சாா்பில், காஞ்சிபுரத்தை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். 7 முதல் 9 வயது வரை, 10 முதல் 15 வயது வரை, 18 வயதுக்கு மேற்பட்டோா் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

பாயிண்ட் டூ பாயிண்ட், லைட் காண்டாக்ட், கிக் லயிட், லோ கிக் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 30 போ் தங்கமும், 10 போ் வெள்ளியும், 15 போ் வெண்கலப் பதக்கமும் உள்பட மொத்தம் 55 பதக்கங்கள் பெற்றனா்.

காஞ்சிரம் ஒன்மேன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியின் நிறுவனா் கே.ஹரிஷ், குத்துச் சண்டைக் கழக செயலாளா் அருண், பயிற்சியாளா் கணேஷ் ஆகியோரும் தங்கம் வென்ற வீரா்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தங்கம் வென்ற காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 30 வீரா்களும் தேசிய அளவிலான குத்துச் சண்டைப் போட்டிக்கு தோ்வாகி இருப்பதாகவும் பயிற்சியாளா் கணேஷ் தெரிவித்தாா்.