காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத வசந்த விழா நிறைவு பெற்றதையொட்டி உற்சவா் தங்கக்குதிரை வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.
வசந்த விழா நிகழாண்டு கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி பெருமாளுக்கு அலங்கார மண்டபத்தில் சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் கேடயத்தில் அலங்காரமாகி சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதிக்கு எழுந்தருளினாா்.
விழாவின் நிறைவாக பெருமாள் புதன்கிழமை வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும்,தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் பெருமாள் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் திருக்கோயில் வளாகத்தில் அனந்தசரஸ் திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அஷ்டபுஜப் பெருமாள் கருட சேவை

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

வேடா் பறி லீலை: தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரா் வீதியுலா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



