தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தங்கக் குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத வசந்த விழா நிறைவு பெற்றதையொட்டி உற்சவா் தங்கக்குதிரை வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

News image

தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா் வரதராஜ பெருமாள்

Updated On :21 மே 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத வசந்த விழா நிறைவு பெற்றதையொட்டி உற்சவா் தங்கக்குதிரை வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

வசந்த விழா நிகழாண்டு கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி பெருமாளுக்கு அலங்கார மண்டபத்தில் சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் கேடயத்தில் அலங்காரமாகி சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதிக்கு எழுந்தருளினாா்.

விழாவின் நிறைவாக பெருமாள் புதன்கிழமை வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும்,தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் பெருமாள் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் திருக்கோயில் வளாகத்தில் அனந்தசரஸ் திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.