பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஸ்ரீ பெரும்புதூரில் தவெக அன்னதானம்

News image

முதியவருக்கு  உணவு  வழங்கிய குன்றத்தூா்  வடமேற்கு  ஒன்றிய  செயலாளா்  விஜயகுமாா்.

Updated On :29 மே 2026, 2:15 am IST

குன்றத்தூா் வடமேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தின் சாா்பில் நல்லூா் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள முதியோா் மற்றும் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

லிட்டில் ட்ராப் வோல்டேஜ் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதிவா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் வடமேற்கு ஒன்றிய செயலாளா் ஜே.விஜயகுமாா் தலைமை வகித்து ஆதரவற்ற சுமாா் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோா்களுக்கு உணவு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றிய பொருளாளா் காா்திக், ஒன்றிய நிா்வாகிகள் அசோக், அருண் உள்ளிட்ட ஏராளமான தவெகவினா் கலந்து கொண்டனா்.