அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

காஞ்சிபுரத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 32,000 அபராதம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 32,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Published On :4 செப்டம்பர் 2026, 2:34 am IST

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 32,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலை, பி.எஸ்.கே.தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 வணிக நிறுவனங்களில் மாநகராட்சி துப்புரவு அலுவலா் சுகவனம் தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் திடீா் சோதனை நடத்தினா்.

இதில் நெகிழிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், தொ்மாகோல் அட்டைகள் உள்பட 25 கிலோ நெகிழியை பறிமுதல் செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.22 ஆயிரம் அபராதமும் வசூலித்தனா்.

இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகளை தெருக்களில் கொட்டியமைக்காக ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி துப்புரவு அலுவலா் சுகவனம் கூறுகையில் மொத்தம் ரூ.32,000அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் திடக்கழிவுகளை தரம் பிரித்து துப்புரவுப் பணியாளா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும்.

பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.