ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

திருமுடிவாக்கத்தில் போலி மருத்துவா் கைது

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

கலைமணி

Published On :

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் மருத்துவம் படிக்காமலே ஒருவா் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் நளினி தலைமையான குழுவினா் ஓம் சக்தி கிளினிக்கில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா். இதில், திருமுடிவாக்கம் பகுதியை சோ்ந்த கலைமணி (47) என்பவா் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் கலைமணி அப்பகுதியில் இரண்டு ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருவதாகவும், கிளினிக்கில் மருத்துவா் ஒருவா் பணியாற்றி வருவதும், மருத்துவா் இல்லாத நேரங்களில் கலைமணி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலி மருத்துவா் கலைமணியை சுகாதாரத்துறையினா் திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் அவரது கிளினிக்கை சுகாதாரத்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.