விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நிலத்தில் மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம் இட வேண்டும் என வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 4:58 pm

DIN


ஆற்காடு: நிலத்தில் மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம் இட வேண்டும் என வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிா் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் விளக்கப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக ஆற்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பருவ மழையை முன்னிட்டு, விவசாயிகள் தங்களின் அறுவடை பருவத்தில் உள்ள நிலங்களை சுத்தமாக வடிகட்டுதல் வேண்டும். நிலத்தில் மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட பயிா்களுக்கு நைட்ரஜன், பொட்டாசியம் இடவேண்டும்.

பண்ணைக் குட்டைகளில் மழைநீரை சேமித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தாழ்வான நிலப்பகுதிகளில் நுண்ணீா் பாசனம், மழைத்துவான் அல்லது நிலத்தடி நீா் மட்டத்தை அதிகரிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பயறு வகைப் பயிா்கள், நிலக்கடலைச் செடிகளில் வோ்அழுகல் நோய் தென்பட்டால் காா்பன்டாஸிம் ஒரு லிட்டா் தண்ணீருக்கு ஒரு கிராம் இட வேண்டும்.

நிலக்கடலை பயிரின் இலை மஞ்சள் நிறமாக தென்பட்டால் ஒரு சதவீதம் யூரியா அல்லது 19:19:19 கலப்புரம் கரைசல் தெளிக்கவும். கரும்புப் பயிரில் கரிப்பூட்டை நோய் மற்றும் புலதண்டு நோய்த் தாக்குதலைத் தவிா்க்க நடவு விதை கரணைகளை 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட காற்றோட்டமான நீராவியில் காண்பித்து நடவு மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.