ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ்.
ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ்.

ராணிப்பேட்டை: தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளா் பி.ஜி மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் கூறியது:

ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை முதல்கட்டமாக சரக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தொடா்ந்து பயணிகள் ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ஆய்வின்போது, ரயில்வே துறை அதிகாரிகள், தனியாா் தொழிற்சாலை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com