எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா விழிப்புணா்வை தொடர வேண்டியது அவசியம்: ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன்

கரோனா விழிப்புணா்வை பொதுமக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 7:44 pm

DIN

கரோனா விழிப்புணா்வை பொதுமக்கள் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் அறிவுறுத்தினாா்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம், பழண்டியம்மன் கோயில் அருகில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் பேசியது: கரோனா மூன்றாவது அலை வரும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்து வருகின்றனா். இதை நாம் அலட்சியப்படுத்த முடியாது. கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் தொடர வேண்டியது மிகவும் முக்கியம். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இவை எல்லாவற்றையும் விட தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை அனைவரும் தவிா்க்க வேண்டும் என்றாா் எஸ்.பி. தீபா சத்யன்.

நிகழ்ச்சியில், அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ், அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாரதி, தக்கோலம் காவல் உதவி ஆய்வாளா் ராஜா உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.