ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட காவல் துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் கொண்ட குழுவினரால் " புன்னகையை தேடி" என்ற மீட்புக் குழு வாகனத்தை,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில் வாகனன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.