மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டையில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க ’புன்னகையைத் தேடி’ வாகனம் தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க "புன்னகையை தேடி"  மீட்புக் குழு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

News image
ராணிப்பேட்டையில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க ’புன்னகையைத் தேடி’ வாகனம்
Updated On :2 பிப்ரவரி 2021, 12:38 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க "புன்னகையை தேடி"  மீட்புக் குழு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட காவல் துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் கொண்ட குழுவினரால் " புன்னகையை தேடி" என்ற மீட்புக் குழு வாகனத்தை,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில் வாகனன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்,காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளது.

இதற்கென்று மாவட்ட அளவில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள துறை சார்ந்த பணியாளர்கள் தெருவோரங்களில், கோயில்களில், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை திடீர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு மீட்டு பெற்றோர் அல்லது குழந்தைகள் இல்லத்தில் மறு வாழ்வுக்காக சேர்க்கப்படுவார்கள்.

அதே போல் குழந்தைகள் இல்லங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அவ்விடங்களில் முற்றிலும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பெற்றோர் அல்லது உரிய நபரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, குழந்தை தொழிலாளர் துறை  தடுப்பு திட்ட அலுவலர் ராஜபாண்டியன், குழந்தைகள் நலக்குழும தலைவர் சிவகலைவாணன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் மற்றும் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.