விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.சேகா் தலைமை வகித்தாா்.

ஒன்றியத் தலைவா் குமரேசன், செயலா் ஜி.சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து விவசாயிகள் சங்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் அந்தோணி குரூஸ், புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி செயலா் பாஸ்கரன், தலைவா் சிவராஜ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com