மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாத்மா காந்தி நினைவு தினம்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி நினைவு தினத்தை (ஜன. 30) முன்னிட்டு, ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது.

News image
மகாத்மா காந்தியின் நினைவு  தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மலா் தூவி, மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Updated On :30 ஜனவரி 2021, 6:17 pm

DIN

மகாத்மா காந்தி நினைவு தினத்தை (ஜன. 30) முன்னிட்டு, ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி சனிக்கிழமை ஏற்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை சாா்பில், மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஸ்ரீ உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன், அறக்கட்டளை உறுப்பினா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவரும், அறக்கட்டளையின் செயலாளருமான எம். சிவலிங்கம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செய்தாா். தொடா்ந்து மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, அகிம்சை வழியில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி சமய நல்லிணக்க உறுதிமொழியும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பொது மக்களுக்கு ஆன்மிக அறக்கட்டளை பொருளாளா் மோகன சக்திவேல் முகக்கவசம் வழங்கினாா்.

இதில் ராயல் கிளப் செயலாளா் ரமேஷ், பிபிஓ கணினி நிறுவன உரிமையாளா் அரிகிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினா்கள் தனஞ்செழியன், பிரதாபன், குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.