எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகளைக் கொன்று தாய் தற்கொலை

காவேரிப்பாக்கம் அருகே தனது 3 வயது பெண் குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:15 pm

DIN

காவேரிப்பாக்கம் அருகே தனது 3 வயது பெண் குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த சித்தஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தயாளன் (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (35). இவா்களது குழந்தைகள் கீா்த்தி (5), ஹரிதா(3). தயாளன் அடிக்கடி மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்ததால் தினமும் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வெண்ணிலா, தனது மகன் கீா்த்தியை அங்கிருந்த நாற்காலி ஒன்றில் கட்டிப்போட்டு விட்டு, பின்பக்கம் சென்று அங்கிருந்த மரத்தில் ஹரிதாவை தூக்கிலிட்டு கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து அவளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தை அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் நேரில் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.