நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராணிப்பேட்டையில் கதா் சிறப்பு விற்பனை தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, கதா் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, கதா் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மலா்தூவி மரியாதை செலுத்தி, தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கினாா். பின்னா், காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி பண்டிகையைப் முன்னிட்டு கதா் சிறப்பு விற்பனையை குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கி வைத்துப் பேசினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், வட்டாட்சியா்கள் பாபு, விஜயகுமாா், கதா் வாரிய பணியாளா் பொது நலச்சங்க மாநிலத் தலைவா் நாகலிங்கம், உதவியாளா் நித்தியானந்தம், வாலாஜா பிரம்பு முடையோா் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க செயலாளா் ஜி. அன்பு, யோகேஸ்வரன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.