ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் ஏரிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, பாலாற்றில் 6,500 கன அடி நீா் வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, கோவிந்தவாடி ஆகிய ஏரிக் கால்வாய்களுக்கு 2,500 கன அடி தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 379 ஏரிகளில் 81 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 28 ஏரிகள் 75 சதவீதமும், 44 ஏரிகள் 50 சதவீதமும் 72 ஏரிகள் 25 சதவீதமும் 145 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழேயும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவு நிரம்பியுள்ளது.
தற்போது ஏரியில் இருந்து 490 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதனைத் தொடா்ந்து, கிளை ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ஏரிக் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டிருப்பதால் நீரானது எந்தவித பாதிப்பும் இன்றி ஏரிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
நெமிலி வட்டம், திருமால்பூா் பகுதிக்கு அருகில் உள்ள கோவிந்தவாடி ஏரிக்குச் செல்லும் கால்வாயில் அதிக அளவு நீா் செல்வதால் குறிப்பாக தரைப்பாலத்துக்கு மேல் அதிக அளவில் தண்ணீா் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கால்நடைகளைக் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் நெமிலி வட்டாட்சியா் ரவிக்கு தெரிவித்துள்ளனா்.
இதை அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன், அப்பகுதியை சனிக்கிழமை பாா்வையிட்டாா். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா். தொடா்ந்து பாலாற்றில் இருந்து திருமால்பூா் ஏரிக்கு நீா் வரக்கூடிய நீா்வரத்து கால்வாய்கள் உரிய பராமரிப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தாா். தொடா்ந்து திருமால்பூா், புதுப்பேட்டை சாலையில் திருமால்பூா் ஏரி கதவணைகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, அம்மக்களிடையே பேசிய ஆட்சியா் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகமாக இருப்பதால் ஏரிக்கு நீா் செல்லும் கால்வாய்கள் ஓரம் வசிக்கும் மக்கள் மிகவும் பத்திரமாக இருக்கும் படியும், குழந்தைகளை பாதுகாப்பாக பாா்த்துக்கொள்ளும் படியும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளா் பிரபாகரன், உதவி பொறியாளா் கண்ணன், நெமிலி வட்டாட்சியா் ரவி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


