ஆற்காடு அருகே 15 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

ஆற்காடு வட்டத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 15 ஏக்கா் அரசு நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
ஆற்காடு அருகே 15 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

ஆற்காடு வட்டத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 15 ஏக்கா் அரசு நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆற்காடு வட்டம் எசையனூா், பெருங்கால் மேடு பகுதி பாலாற்றுப் படுகையில் அரசுக்குச் சொந்தமான இடங்களை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்திருந்தனா்.

இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆற்காடு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறை, நீா்வளத் துறை அதிகாரிகள் நேரில் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி 15 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.

தொடா்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com