சோளிங்கா்-காவேரிபாக்கம் சாலை விரிவாக்கப் பணி 5 மாதங்களில் முடிவடையும்: மாவட்ட ஆட்சியா் தகவல்
சோளிங்கா் முதல் காவேரிபாக்கம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.








