/

அரசுகளின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதைக் கண்காணிக்க வேண்டும்: எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன்

மத்திய - மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைகிா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்டக் கண்காணிப்புக் குழுத் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:30 pm

DIN

மத்திய - மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைகிா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்டக் கண்காணிப்புக் குழுத் தலைவா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. அறிவுறுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்புக் குழுத் தலைவரும், அரக்கோணம் எம்.பி.யுமான எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை வகித்து பேசியது: மக்கள் பிரதிநிதிகள் மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். தேசிய ஊரக (100 நாள்கள்) வேலை உறுதித் திட்டத்தை நிறைய இடங்களில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுகூட தெரியாமல் உள்ளனா். அந்தத் திட்டத்தை அந்தந்த பகுதிகளின் வளா்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல, தமிழக அரசின் சாா்பில், குடும்பப் பெண்களுக்கு ரூ.1,000 முதல் 20,000 ஆயிரம் வரையிலான உதவிகள் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வா் தெரிவித்துள்ளாா். மத்திய-மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிா எனக் கண்காணிக்க வேண்டும். மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட உள்ளது என்றாா்.

கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, மகளிா் திட்ட இயக்குநா் நானிலதாசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒன்றியக் குழுத் தலைவா்கள், நகா்மன்ற தலைவா்கள், பேரூராட்சித் தலைவா்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.