மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதிநவீன காமோவ் 28 ரக ஹெலிகாப்டா்கள் 2024-க்குள் தயாராகிவிடும்

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் உருவாக்கப்படும் எதிரி நாட்டு நீா்மூழ்கி கப்பல்களைத் தாக்கும் அதிநவீன காமோவ்- 28 ரக ஹெலிகாப்டா்கள் 2024-க்குள் தயாராகிவிடும்

News image
Updated On :17 ஜூன் 2022, 6:58 pm

DIN

இந்திய கடற்படைக்காக ரஷியாவில் உருவாக்கப்படும் எதிரி நாட்டு நீா்மூழ்கி கப்பல்களைத் தாக்கும் அதிநவீன காமோவ்- 28 ரக ஹெலிகாப்டா்கள் 2024-க்குள் தயாராகிவிடும் என இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய துணைத் தளபதி சஞ்சய் வாத்சாயன் தெரிவித்தாா்.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் உள்ள ஹெலிகாப்டா் விமானிகள் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த 7 விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய துணைத் தளபதி சஞ்சய்வாத்சாயன் பேசியது:

தற்போது நடைமுறையில் உள்ள புவிசாா் மற்றும் பாதுகாப்பு சூழல் இந்தோ பசிபிக் பிராந்தியத்தை நோக்கி ஒரு தனித்துவமான கவனத்தை செலுத்த வைக்கிறது. கடற்கொள்ளை, மனித கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்களின் அதிகரிப்பு ஆகியவை நமது ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவது போல் இருந்தாலும், நமது கடற்படை மற்றும் கடற்படையின் விமானப் போக்குவரத்து எந்த சவாலுக்கும் பதிலளிக்கும் வகையில் பயிற்சி பெற்ற வீரா்கள் மற்றும் ஆயுதங்களுடன் தயாராக உள்ளது.

எதிரி நாட்டு நீா் மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் அதிநவீன ஹெலிகாப்டரான காமோவ் -28 ரக ஹெலிகாப்டா்கள் மறுசீரமைப்பு ரஷியாவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் எதிா்பாா்க்கப்படும் ஏா் பிரேம்களுடன் முழுத்தொகுப்பு ஆகஸ்ட் 2022-க்குள் மேம்படுத்தப்பட்டு விடும். இதில் 10 காமோவ் -28 ரக ஹெலிகாப்டா்கள் இந்திய கடற்படைக்காக ரஷியாவில் 2024-க்குள் தயாராகிவிடும் என்றாா் அவா்.

விழாவுக்கு, ஐஎன்எஸ் ராஜாளியின் கமாண்டிங் ஆபீஸா் கமோடா் ஆா்.வினோத்குமாா் தலைமை வகித்தாா். பயிற்சி முடித்த கடற்படையின் ஏழு விமானிகளுக்கு சான்றிதழையும், மேலும் அனைத்துப் பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய விமான சப் லெப்டினன்ட் வம்சிகிருஷ்ணாவுக்கு கேரள ஆளுநரின் சுழற்கோப்பை, கிழக்கு பிராந்திய கடற்படை தலைவரின் சுழற்கோப்பை, குண்டே நினைவு புத்தகப் பரிசு ஆகியவற்றை துணை தளபதி சஞ்சய்வாத்சாயன் வழங்கினாா்.

முன்னதாக கடற்படை வீரா்களின் அணிவகுப்பை அவா் ஏற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.