மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரக்கோணம்: விவசாய கிணற்றில் குளித்த இருவர் நீரில் முழ்கி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரில் விவசாய கிணற்றில் குளிக்க சென்ற ரோஷன்(26), யுவராஜ்(38) நீரில் முழ்கி உயிரிழந்தனர்.

News image
நீரில் முழ்கி உயிரிழந்த யுவராஜ், ரோஷன்
Updated On :19 ஜூன் 2022, 5:56 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரில் விவசாய கிணற்றில் குளிக்க சென்ற ரோஷன்(26), யுவராஜ்(38) நீரில் முழ்கி உயிரிழந்தனர். சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் ரோஷன்(26). இவர் தனியார் நிறுவனத்தில் ஒட்டுனராக பணிப்புரிந்து வந்தார். 

சனிக்கிழமை மதியம் சென்னை பெரம்பூரிலிருந்து ரோஷனின் நண்பன் ராஜ்குமார்(36) அரக்கோணம் வந்துள்ளார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார்.

ரோஷன், யுவராஜ் இருவரும் அரக்கோணம் அடுத்த காவனூரில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்த கிணற்றில் குளித்துள்ளனர்கள். அப்போது நீச்சல் தெரியாத யுவராஜ் நீரில் முழ்கியதாகவும் அவரை மீட்க முயன்ற ரோஷன் இருவரும் நீரில் முழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருவரும் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இன்று காலை காவனூர் விவசாய கிணற்றின் கரையில் இருவரது உடைகள் இருந்த நிலையில் கிணற்றில் பார்த்தபோது இருவரது சடலங்களும் மிதந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் அரக்கோணம் நகர காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.