நெமிலி அருகே மதுபோதையில் ஆற்று தண்ணீரில் இறங்கி தத்தளித்தவரை மீட்ட காவலர்கள் 

நெமிலி அருகே மதுபோதையில் ஆற்றுப்பால தண்ணீரில் இறங்கி தத்தளித்துக்கொண்டிருந்தவரை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். 
நெமிலி அருகே மதுபோதையில் ஆற்று தண்ணீரில் இறங்கி தத்தளித்தவரை மீட்ட காவலர்கள் 

நெமிலி அருகே மதுபோதையில் ஆற்றுப்பால தண்ணீரில் இறங்கி தத்தளித்துக்கொண்டிருந்தவரை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள சிறுணமல்லி ஆற்றுப்பாலத்தில் தொடர் மழை காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் அவ்வழியாக வந்த மதுபோதையில் இருந்த ஒருவர் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க முயன்றார். 

ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததால் அவரால் கரை சேர முடியவில்லை.

உடனே அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த நெமிலி காவல் நிலைய காவலர்கள் மூன்று பேர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி மதுபோதையில் இருந்தவர்ரை பத்திரமாக மீட்டு வந்தனர். 

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com