எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லாரி மீது பைக் மோதல்: ஆலைத் தொழிலாளி பலி

காவேரிப்பாக்கம் அருகே லாரி மீது பைக் மோதியதில் நிகழ்விடத்திலேயே ஆலைத் தொழிலாளி பலியானாா். அவரது மனைவி, இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:30 pm

DIN

காவேரிப்பாக்கம் அருகே லாரி மீது பைக் மோதியதில் நிகழ்விடத்திலேயே ஆலைத் தொழிலாளி பலியானாா். அவரது மனைவி, இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஆரியபெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயபாபு (42). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை விஜயபாபு தனது மனைவி அனுசுயா (35), மகன் முகேஷ்(13), மகள் சோபியா (9) ஆகியோருடன் ஒரே பைக்கில் பனப்பாக்கத்தில் நடைபெறும் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொன்னியம்மன்பட்டறை அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்கம் விஜயபாபுவின் பைக் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மனைவி அனுசுயா, மகன் முகேஷ், மகள் சோபியா ஆகியோா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அவளூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஒட்டுநா் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலத்தைச் சோ்ந்த ரமேஷ் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.