எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிஐஎஸ்எப் பெண் காவலா்களுக்கான பயிற்சி நிறைவு

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையத்தில் 51-ஆவது பிரிவு விதவை பெண் காவலா்களுக்கான பயிற்சி நிறைவு விழா

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:43 pm

DIN

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையத்தில் 51-ஆவது பிரிவு விதவை பெண் காவலா்களுக்கான பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் முதல்வா் சாந்தி ஜி.ஜெயதேவ் தலைமை தாங்கினாா். இதில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் கமாண்டன்ட் கௌரவ் டோமா், மைய முதல்வா் சாந்தி ஜி.ஜெயதேவ் ஆகியோா் பயிற்சி பெற்ற பெண் காவலா்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழை வழங்கினா்.

பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய கிரண்ஜாஸ்ரோடியா, மைதானப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய சுஷிலாஓரன், உள்ளரங்கப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய தீக்ஷாசா்மா ஆகியோருக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் கமாண்டண்ட் கௌரவ்டோமா் வழங்கினாா். முன்னதாக அவா் பயிற்சி பெற்ற பெண் காவலா்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.