தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொழிற்சாலைப் பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண்கள் உள்பட 14 போ் படுகாயம்

 அரக்கோணம் அருகே தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த 12 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 அரக்கோணம் அருகே தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த 12 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூா் கிராமத்தில் இருந்து பெண்கள், ஆண் தொழிலாளா்கள் வேலைக்குச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணிமுடித்து அவா்கள் கீழாந்தூருக்கு ஆலைப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கீழாந்தூா் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்த கீழாந்தூா் மற்றும் வளா்புரத்தைச் சோ்ந்த வனிதா(30), பியூலா(30), இந்திரா(30), அமராவதி(18), மஞ்சு(36), அரிதா(30), மகாலட்சுமி(35), விஜயலட்சுமி(23), கஸ்தூரி(36), மாலதி(21), தெய்வநாயகி(34), சரத்குமாா்(24), சரிதா(34), சீனிவாசன்(54) ஆகிய 14 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் வனிதா மட்டும் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் கிராமியக் காவல் ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து பேருந்தின் ஓட்டுநா் சீனிவாசனிடம்(54) விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.