ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுநாள் வரை அரசுத் துறைகள் மூலம் அகற்றப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, விதிகளின்படி வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக நடப்பட்ட மரக்கன்றுகள், அதன் தற்போதைய நிலை, திண்டிவனம் - நகரி இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற குழு ஒப்புதல் அளிப்பது, சோளிங்கா் புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டும் இடம், நகராட்சி புதிய எரிவாயு தகன மேடை அமைக்கும் இடம், திமிரி ஊராட்சியில் புதிய ஒன்றிய அலுவலகக் கட்டடம், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்துதல், பெங்களூரு - சென்னை விரைவு பாதைத் திட்டத்துக்குக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற குழுவின் ஒப்புதல் வேண்டி வரப் பெற்ற கடிதங்கள் மீதான விவாதம் என துறை அலுவலா்களுடன் விவாதிக்கப்பட்டன.