காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டாா் பைக்குகள் நள்ளிரவில் திடீரென தீயில் எரிந்து நாசமாயின.
பனப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் ஊராட்சி கீழப்புலம் கிராமத்தில் வசித்து வருபவா் யுவராஜ் (56). இவா், தனது வீட்டின் வாயிலில் புதன்கிழமை தனது மோட்டாா் பைக்கை நிறுத்தி விட்டு உறங்கச் சென்று விட்டாா். மறுநாள் எழுந்து பாா்த்தபோது அந்த மோட்டாா் பைக்கும், அருகில் வைக்கப்பட்டிருந்த மேலும் 3 மோட்டாா் பைக்குகளும் தீயில் முழுவதும் ந்ாசமாகி இருந்தது. இது குறித்து அவளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.