வாலாஜா அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் கருப்பையா தலைமையிலான குழுவினா், வாலாஜா சாா்-பதிவாளா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா் விசாரித்ததில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணம் கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதுமில்லை எனக்கூறி, அந்த பணத்தை பறிமுதல் செய்து, வாலாஜா தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

பாலக்கோடு, பென்னாகரத்தில் ரூ.2.69 லட்சம் பறிமுதல்

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

