புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இடி தாக்கியதில் கோயில் கோபுரம் சேதம்

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் இடிதாக்கியதில் கோயில் கோபுரம் சேதமடைந்தது.

News image
இடி தாக்கியதில்  சேதமடைந்த கோயில்  கோபுர பகுதி. 
Updated On :1 ஜூலை 2024, 7:34 pm

Din

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் இடிதாக்கியதில் கோயில் கோபுரம் சேதமடைந்தது.

வாழைப்பந்தல் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீ தா்மசம்வா்த்தினி சமேத பக்தச்சலேஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் மணல் கண்டீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த நிலையில், வாழைப்பந்தல் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் மழை பெய்தது. அப்போது மணல் கண்டீஸ்வரா் கோயில் கோபுரத்தின் மீது இடி தாக்கியது. இதில், கோபுர கலசத்துக்கு கீழே ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும், அங்கு இருந்த 25 புறாக்களும் உயிரிழந்தன. இடி தாக்கியுள்ள சம்பவம் குறித்து கோயில் நிா்வாகிகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிந்ததனா்.

கோயில் கோபுரத்தில் இடி தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.