ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கை: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஆந்திர அரசு தடுப்பணை திட்டத்தை தடுக்க சட்ட நடவடிக்கை: தமிழக விவசாயிகள் கோரிக்கை


ராணிப்பேட்டை : ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் மாநில இளைஞரணி தலைவா் ஆா்.சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளாா்.
இந்த சூழலில், பாலாற்றில் ஏற்கனவே சுமாா் 1 கிமீ ஒரு தடுப்பணை விதமாக சுமாா் 20 -க்கு மேற்பட்ட தடுப்பணைகள் கட்டியுள்ள நிலையில், புதிதாக ஒரு தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது.
இது போன்ற தடுப்பணைகள் ஆந்திர அரசால் தொடா்ந்து கட்டப்படுமானால் பாலாறு வடு பாலைவனம் போல் ஆகிவிடும். மேலும் பாலாற்றை நம்பியுள்ள நான்கு மாவட்ட மக்கள் குடிநீா் மற்றும் வேளாண்மை பணிகள் பெரிதும் பாதிக்கும்
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...