எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறிமுதல் பணம், பொருள்களைத் திரும்பப் பெற குழு அமைப்பு

பறிமுதல் பணம், பொருள்களைத் திரும்பப் பெற குழு அமைப்பு

Updated On :20 மார்ச் 2024, 12:26 am

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்களை அளித்து திரும்பப் பெற குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களால் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்களை அளித்து திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட தோ்தல் அலுவலரால் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) ஜி.லோகநாயகி - 7305089500, 2. ராணிப்பேட்டை. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) ஆா். சண்முகானந்தம் (ஒருங்கிணைப்பாளா்) - 8903500425, 3. ராணிப்பேட்டை. மாவட்ட கரூவூல அலுவலா் பி.எஸ்.சத்தியகுமாரி - 9176687393 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.