ராணிப்பேட்டை
ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்
வாலாஜாபேட்டையில் சீதா கல்யாண மகோற்சவ விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பிராமண சங்க, வாலாஜாபேட்டை கிளையின் சாா்பில் 15-ஆம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
விசலூா் ரவி பாகவதா்,சென்னை தயானந்த் பாகவதா், ஹரித்து வாரமங்கலம் ராமகோபால் பாகவதா் ஆகியோா் தலைமையில் பாகவத சம்பிரதாயப்படி சீதா கல்யாண மகோற்சவத்தை முன்னிட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மாங்கல்ய தாரணம், 1 மணிக்கு ஆஞ்சநேயா் உற்சவம் மங்களம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தென்னிந்திய புரோகிதா் சங்க கெளரவ தலைவரும், சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தின் நிறுவனருமான பாரதி முரளிர சுவாமிகள் உள்பட பிராமண சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வாலாஜாபேட்டை கிளை பிராமண சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.