மாவட்ட திட்ட இயக்குநரின் ஓட்டுநா் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு
மாவட்ட திட்ட இயக்குநரின் ஓட்டுநா் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திட்ட இயக்குனரின் காா் ஓட்டுநா் வெங்கடேசன் பணியில் இருந்த போதே மாரடைப்பால் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த ஒழலை கிராமத்தைச் சோ்ந் வெங்கடேசன் (38),. இவா் உள்ளாட்சி பிரிவு திட்ட இயக்குநரின் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பணிக்கு வந்த அவா், மதிய உணவுக்கு பின் கழிவறைக்கு சென்றுள்ளாா். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அலுவலகப் பணியாளா்கள் உள்ளே சென்று பாா்த்த போது கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த சம்பவம் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...