புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மழை எதிரொலி: இன்றும் பல விரைவு ரயில்கள் ரத்து

கனமழை எதிரொலியாக புதன்கிழமையும் பல ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 அக்டோபர் 2024, 6:31 pm

Din

கனமழை எதிரொலியாக புதன்கிழமையும் பல ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதன்கிழமை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:

சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கு இரவு 8.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னைக்கு காலை 5 மணிக்கு புறப்படும் ஏலகிரி விரைவு ரயில், சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.55-க்கு புறப்படும் ஏலகிரி விரைவு ரயில், திருப்பதியில் இருந்து சென்னைக்கு காலை 6.25-க்கு புறப்படும் விரைவு ரயில், சென்னையில் இருந்து திருப்பதிக்கு மாலை 4.35-க்கு புறப்படும் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ஆகியன புதன்கிழமை (அக். 16) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.