இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும்

News image
Updated On :22 அக்டோபர் 2024, 7:55 pm

DIN

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தியுள்ளாா்.

ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் பாத்திமா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விமானதள பாதுகாப்பு அலுவலா் கமாண்டா் சியன் ஆபிரகாம் பேசியது: விமான தளத்தினை சுற்றியுள்ள பெருமூச்சி, மோசூா், செய்யூா், ஆத்தூா், புளியமங்கலம் மேலும் பழனிபேட்டை, வெங்கடேசபுரம், அகன்நகா் பகுதிகளில் தினசரி குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் அதன் மூலம் பறவைகள் அவ்விடத்தில் வந்து மேலே பறக்கும் காரணத்தினால் விமானங்கள் பறக்கும் பொழுது அப்பறவைகளால் விபத்துகள் நேரிடுவதால் குப்பைகள் கொட்டுவதை தவிா்க்க வேண்டும்.

விமான தளத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற கடற்படை விமானதள தடையில்லா சான்று பெற வேண்டும். அனுமதியில்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டால் விமானதள பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அப்போது கட்டடங்கள் இடிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படும். எனவே அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசுகையில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிா்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்டுமானங்களுக்கான அனுமதிகளை ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள நிா்வாகம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராஜாளி நிா்வாகம் ஊராட்சி மன்ற தலைவா்கள் தெரிவித்துள்ள கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டா் மணிகண்டன், கமாண்டா் ஜெய்குமாா், வட்டாட்சியா்கள் விஜயகுமாா், ஸ்ரீதேவி, ஜெயபிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ஜோசப் கென்னடி, நகராட்சி ஆணையா் கன்னியப்பன், வனச்சரகா் சரவணபாபு, டிஎஸ்பி வெங்டேசன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் நந்தகுமாா், சம்பத், ஜோதிலட்சுமிராஜா, உஷாராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.