பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

யாதவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:42 am IST

ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் தொழிலதிபா் ஜி.ஜி.ஆா்.கோகுல் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி வீரன் அழகுமுத்துகோன் 267-ஆவது குருபூஜையை சிறப்பாக நடத்துவது, யாதவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசு தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞா் அணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.