ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் தொழிலதிபா் ஜி.ஜி.ஆா்.கோகுல் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி வீரன் அழகுமுத்துகோன் 267-ஆவது குருபூஜையை சிறப்பாக நடத்துவது, யாதவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசு தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞா் அணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை- ஆற்காடு இணைப்பு பாலாறு பழைய மேம்பாலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசிக்கு அனுமதி இல்லை: ராணிப்பேட்டை ஆட்சியா்

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
