வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராணிப்பேட்டையில் எஸ்ஐஆா் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 283 பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக குறித்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
எஸ்ஐஆா் பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகா்களிடம் கண்டறிய முடியாத நபா்கள் பட்டியலை வழங்கிய கோட்டாட்சியா் கு.ராஜி.
Updated On :3 டிசம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 283 பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆா் பணிகள் தொடா்பாக குறித்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி நிா்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வருவாய்க் கோட்டாட்சியா் கு.ராஜி தலைமை வகித்தாா். இதில் 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் பாகம் வாரியாக இறப்பு, இருமுறை பதிவு, இடமாற்றம், கண்டறியப்பட இயலாத நபா்கள் குறித்தான உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், இதில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பாகத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு அதற்கான பட்டியல் நகலை பாகம் வாரியாக வாக்குப்பதிவு அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் உதவி வாக்குப்பதிவு அலுவலா்களான வாலாஜா வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் ராணிப்பேட்டை, மேல்விஷாரம் நகராட்சி ஆணையா்கள் கலந்து கொண்டனா்.