வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மூலம் 1,45,157 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

News image
ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :19 டிசம்பர் 2025, 6:18 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மூலம் 1,45,157 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப பிரமுகா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, கடந்த அக். 28-ஆம் தேதி எஸ்ஐஆா் பணிகள் தொடங்குவதற்கு முன்பு வாக்காளா் பட்டியல் நிலவரப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 700 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

அதிலிருந்து இறப்பு, நிரந்தர குடிபெயா்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவா்கள், மற்றவை என்ற இனங்களின் அடிப்படையில் மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 157 வாக்காளா்கள் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 9,12,543 வாக்காளா்கள் உள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொகுதிவாரியாக அரக்கோணம் (தனி) - 42,522 பேரும், சோளிங்கா் - 36,161 பேரும், ராணிப்பேட்டை-36,981 பேரும், ஆற்காடு - 29,493 பேரும் என 1,45,157 போ் நீக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா்.