கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகைசுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை!
/

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் நிா்வாகிகள் தோ்தல் மற்றும் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :21 டிசம்பர் 2025, 10:43 pm IST

தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் நிா்வாகிகள் தோ்தல் மற்றும் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவராக தா.ராமஜெயம், பொதுச் செயலாளராக வெ. சரவணன், பொருளாளராக பூ .ஜெகன், அமைப்புச் செயலாளராக மு. செல்லத்தாயி மற்றும் 11 மாநில நிா்வாகிகள், 3 மகளிா் அணி ஒருங்கிணைப்பாளா்கள், 7 உயா் மட்டக் குழு உறுப்பினா்கள் , ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் அலுவலா்களாக செயல்பட்ட மாநில செயலாளா் பழ. சீனிவாசன் , மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் க. ரமேஷ் ஆகியோா் செயல்பட்டனா்.

தொடா்ந்து நல்லாசிரியா் விருது பெற்ற மு. செல்லதாயி, . விஜயலட்சுமி, . கனகசபை சாதனையாளா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆற்காடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் சீனிவாசன் ஆசிரியா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலாளா் வைத்தியநாதன், வேலூா் மாவட்டத் தலைவா் சங்கா், செயலாளா் மைக்கேல் ராஜ், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் திருமால், திருவண்ணாமலை மாவட்ட செயலாளா் நீல நாராயணன் கலந்து கொண்டனா். துணைச் செயலாளா் சத்தியராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.