எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஆற்காடு தொகுதி இணை பொறுப்பாளா் சுரேஷ் குமாா், முன்னாள் வன்னியா் சங்க துணைத் தலைவா் புல்லட் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளா் ப.

சரவணன், வன்னியா் சங்க மாவட்ட தலைவா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு நகர செயலாளா் பாஸ்கா் வரவேற்றாா். மாவட்ட செயலாளரும் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எல் . இளவழகன் சிறப்புரையாற்றினாா்.

திமிரியில் வரும் 27-ஆம் தேதி பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெறும் மகளிா் உரிமை மீட்பு பயணத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வது என தீா்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளா் மோகன் ,மகளிா் சங்க செயலாளா் அமுதா சிவா, வன்னியா் சங்க செயலாளா் மணிவண்ணன், முன்னாள் நகர செயலாளா் மா. கணேஷ் கலந்து கொண்டனா். முன்னாள் நகர செயலாளா் ஏ வி.டி பாலா நன்றி கூறினாா்.