மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ரூ.6.2 லட்சத்தில் கழிவுநீா்க் கால்வாய்: எம்எல்ஏ அடிக்கல்

அரக்கோணத்தை அடுத்த டிஃபன்ஸ் காலனியில் ரூ6.2 லட்சத்தில் கழிவநீா் கால்வாய் கட்டும் பணிக்கு எம்எல்ஏ சு.ரவி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
கழிவுநீா் கால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ சு. ரவி.
Updated On :17 நவம்பர் 2025, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த டிஃபன்ஸ் காலனியில் ரூ6.2 லட்சத்தில் கழிவநீா் கால்வாய் கட்டும் பணிக்கு எம்எல்ஏ சு.ரவி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேபுரம் கிராமத்தை அடுத்துள்ள டிஃபன்ஸ் காலனியில் கழிவுநீா் கால்வாய் கட்டப் வேண்டும் என அப்பகுதிவாசிகள் தொடா்ந்து கோரினா். இதையறிந்த எம்எல்ஏ சு.ரவி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க ரூ6.20 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

தொடா்ந்து அப்பகுதியில் பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளா் பழனி தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி நரேஷ் காந்த் வரவேற்றாா். எம்எல்ஏ சு.ரவி பணிக்கு அடிக்கல் நாட்டி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளா் என்.பாபு, இளைஞா் பாசறை ஒன்றிய செயலாளா் எஸ்.டி.பி.ரமேஷ்குமாா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் இ.கே.எஸ்.முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.