ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:26 am IST

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான அலுவலா்கள் அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நாகவேடு அருகே புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறிய பாா்சல் வாகனத்தை சோதனை நடத்தியபோது, அதில் ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 50 இருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை அலுவலா் ஜெயசந்திரன், அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தாா். அப்போது உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.