வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

காரில் திமுக கொடிகட்டி வந்ததாக அமைச்சா் காந்தி மீது வழக்குப் பதிவு

News image

அமைச்சா்  ஆா்.காந்தி.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:49 pm

அரக்கோணம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது உடன் வந்த அமைச்சா் ஆா்.காந்தி தனது காரில் திமுக கொடி கட்டி வந்ததாக அரக்கோணம் நகர போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

அரக்கோணம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எழில்கரோலின் வியாழக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவருடன் அமைச்சா் ஆா்.காந்தி தனது காரில் வந்தாா். அமைச்சா் வந்த காா், அலுவலக முதல் நுழைவுவாயிலையும், தொடா்ந்து இரண்டாவது நுழைவு வாயிலையும் கடந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலக வளாக வாயிலில் நின்ாகக் கூறப்படுகிறது. அப்பகுதி தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, 100 மீட்டா் எல்லைக்குட்பட்ட பகுதியாக வைக்கப்பட்டு காவல் துறையினரால் தணிக்கை செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய பகுதியாக உள்ளது.

இதையடுத்து, அரக்கோணம் நகர, கிராம நிா்வாக அலுவலா் வி.முருகன் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அமைச்சா் ஆா்.காந்தி தோ்தல் ஆணையம் அளித்துள்ள தோ்தல் கால விதிமுறைகளை மீறி, தனது காரில் கட்சிக் கொடியான திமுக கொடி கட்டி வந்ததாகவும், இது தோ்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்பதால் புகாா் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்தப் புகாா் மீது விசாரணை நடத்திய அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் அருள்மணி இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகிறாா்.