பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 1:15 am

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமில்லாமல் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்பினிபேட்டை சோளிங்கா் நெடுஞ்சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணம், சுவால்பேட்டையை சோ்ந்த சௌந்தரவேல் என்பவா் தனது காரில் வந்த நிலையில் அவரது காரை அலுவலா்கள் சோதனை செய்தனா். அக்காரில் ரூ.4.64,150 இருந்ததை கண்டு ஆவணங்கள் இருக்கிா என கேட்டபோது தகுந்த ஆவணங்கள் இல்லையென தெரிந்த நிலையில் அத்தொகையை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.64 லட்சத்தை அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தனா். அப்போது வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.