தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 6:45 am IST

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமில்லாமல் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்பினிபேட்டை சோளிங்கா் நெடுஞ்சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணம், சுவால்பேட்டையை சோ்ந்த சௌந்தரவேல் என்பவா் தனது காரில் வந்த நிலையில் அவரது காரை அலுவலா்கள் சோதனை செய்தனா். அக்காரில் ரூ.4.64,150 இருந்ததை கண்டு ஆவணங்கள் இருக்கிா என கேட்டபோது தகுந்த ஆவணங்கள் இல்லையென தெரிந்த நிலையில் அத்தொகையை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.64 லட்சத்தை அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தனா். அப்போது வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.